"விபத்து போட்டோ" வந்ததா? திறக்காதீங்க! ரூ.4.4 லட்சம் காலி!: வாட்ஸ்அப்-ல் வந்த "விபத்து போட்டோ".. பதறிப்போய் கிளிக் செய்த நபர்! இறுதியில் காத்திருந்த ரூ.4.4 லட்சம் அதிர்ச்சி!
"ஐயோ! யாருக்கோ விபத்து போலிருக்கு!" என்ற நமது பதற்றத்தையும், ஆர்வத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஹேக்கர்கள் நடத்தும் புதுவிதமான மோசடி இது.
வாட்ஸ்அப்-ல் "விபத்து போட்டோ" வந்ததா? திறக்காதீங்க! ரூ.4.4 லட்சம் காலி!
உத்திரப் பிரதேச மாநிலம் பாராபங்கி (Barabanki) பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில், "விபத்து நடந்துள்ளது, இந்த போட்டோவை பாருங்கள்" என்று ஒரு ஃபைல் (File) அனுப்பப்பட்டிருந்தது. அவர் அதைத் திறந்த அடுத்த சில நிமிடங்களில், அவர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4.44 லட்சம் திருடப்பட்டுள்ளது.
LatestLY இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த மோசடி எப்படி நடந்தது? நாம் எப்படி பாதுகாப்பாக இருப்பது? விரிவாகப் பார்ப்போம்.
நடந்தது என்ன? (The Incident)
பாதிக்கப்பட்ட நபரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், சில போட்டோக்கள் அல்லது ஒரு லிங்க் அனுப்பப்பட்டு, "இது ஒரு விபத்து நடந்த இடம், போட்டோவை டவுன்லோட் செய்து பாருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
அந்த நபர் பதற்றத்தில், அது தன் உறவினர்களாக இருக்குமோ என்ற பயத்தில் அந்த ஃபைலை கிளிக் செய்துள்ளார். அவர் கிளிக் செய்த அந்த ஃபைல், ஒரு சாதாரண போட்டோ அல்ல. அது ஒரு மால்வேர் (Malware) அல்லது வைரஸ் நிரப்பப்பட்ட செயலி (APK File).!
ஸ்பேம் கால்களில் இருந்தும் தப்பிக்க ஏர்டெல் கொண்டு வந்த புதிய AI பாதுகாப்பை பற்றி தெரியுமா? 👉 OTP திருட்டை தடுக்க ஏர்டெல்லின் அதிரடி! AI பாதுகாப்பு எப்படி வேலை செய்கிறது?
பணம் எப்படி திருடப்பட்டது? (How the Hack Works?)
- Step 1: நீங்கள் அந்த ஃபைலை கிளிக் செய்தவுடன், உங்கள் போனில் ரகசியமாக ஒரு ஆப் (Remote Access Trojan - RAT) இன்ஸ்டால் ஆகிவிடும்.
- Step 2: இந்த ஆப், உங்கள் போனின் SMS, OTP மற்றும் Screen ஆகியவற்றை ஹேக்கர்களுக்கு நேரடியாகக் காட்டிக் கொடுத்துவிடும்.
- Step 3: ஹேக்கர்கள் உங்கள் வங்கி கணக்கை லாகின் செய்து பணத்தை எடுப்பார்கள். வங்கி அனுப்பும் OTP உங்கள் போனுக்கு வரும், ஆனால் அதை ஹேக்கர்களும் பார்த்துவிடுவார்கள். உங்களுக்குத் தெரியாமலே பணம் போயிருக்கும்.!
உங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது? (Safety Tips)
இந்த மோசடியில் இருந்து தப்பிக்க 3 எளிய வழிகள் உள்ளன:
- தெரியாத நம்பர் = ஆபத்து: உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத எண்ணிலிருந்து வரும் போட்டோ, வீடியோ அல்லது PDF ஃபைல்களை எக்காரணத்தைக் கொண்டும் டவுன்லோட் செய்யாதீர்கள்.
- ஃபைல் வகையை கவனியுங்கள்: ஒரு போட்டோ வழக்கமாக .jpg அல்லது .png என்றுதான் முடியும். ஆனால் ஹேக்கர்கள் அனுப்பும் ஃபைல் .apk அல்லது .exe என்று முடிந்தால், அது நிச்சயம் வைரஸ் தான்!
- Auto-Download ஆஃப் செய்யுங்கள்: வாட்ஸ்அப் செட்டிங்ஸில் சென்று Media Auto-Download என்பதை ஆஃப் செய்து வையுங்கள். இதனால் வைரஸ் தானாக டவுன்லோட் ஆவதைத் தடுக்கலாம்.
சைபர் கிரைம் உதவி
ஒருவேளை நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ இப்படி பணத்தை இழந்தால், உடனே 1930 என்ற எண்ணை அழையுங்கள் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளியுங்கள். முதல் 2 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பணத்தை மீட்க அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்: ரூ.15,000 பட்ஜெட்ல இப்படியொரு போனா? கீழே போட்டாலும் உடையாது! OPPO K14x 5G மிரட்டல்!
⚠️ Tech Voice Verdict
"ஆர்வமே ஆபத்து! விழித்திருங்கள்!" 👁️🛑
ஹேக்கர்கள் இப்போது டெக்னாலஜியை விட, மனிதர்களின் உளவியலை (Psychology) தான் அதிகம் குறிவைக்கிறார்கள். "விபத்து", "பரிசு", "வேலை வாய்ப்பு" போன்ற வார்த்தைகளைப் பார்த்தால் நமக்கு வரும் ஆர்வம்தான் அவர்களின் மூலதனம்.
நமக்குத் தெரியாத ஒருவர் நமக்கு ஏன் போட்டோ அனுப்ப வேண்டும்? என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டாலே போதும், (ரூ.4.4 லட்சம் காலி!) 4 லட்சம் என்ன.. 4 ரூபாயைக் கூட இழக்க மாட்டோம். "Think Before You Click" என்பதுதான் இப்போதைய தாரக மந்திரம்! ✅
Source / நன்றி: LatestLY