New Rules From September 1: ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் பொதுமக்களின் நிதி சார்ந்த பல்வேறு நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு, வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட சேவைகளில் முக்கிய விதிமுறைகள் (New Rules From September 1) அமலுக்கு வருகின்றன. இவை மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.
LPG Cylinder Price
எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம்: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலையை (LPG cylinder price) மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி வரும் செப்டம்பர் 1ஆம் தேதியும் சிலிண்டர் விலையில் புதிய மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.202 வரை குறைக்கப்பட்ட நிலையில், இந்த முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்: Realme C100i: ரூ.15,000 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே!
Airport Boarding Pass Rules
விமான நிலைய போர்டிங் பாஸ்: வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் விமான பயணிகளுக்கான குடியேற்றச் சோதனையில் செப்டம்பர் 1 முதல் புதிய எளிய முறை நடைமுறைக்கு வருகிறது. இனி காகித போர்டிங் பாஸில் அதிகாரிகள் பிசிகல் முத்திரை குத்த வேண்டிய அவசியம் இல்லை.
பயணிகள் தங்களது மொபைல் போனில் உள்ள டிஜிட்டல் இ-போர்டிங் பாஸ் (E-boarding pass) அல்லது அதன் அச்சு நகலைக் காண்பித்து சோதனைகளை முடித்துக் கொள்ளலாம். இதனால் விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நேரம் கணிசமாகக் குறையும்.
இதையும் படியுங்கள்: Redmi Note 17 Pro Max 5G: 10000mAh அசுர பேட்டரியுடன் அறிமுகம்.. முழு விவரங்கள்!
LPG e-KYC Deadline
சமையல் எரிவாயு சிலிண்டர் இ-கேஒய்சி: சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது இ-கேஒய்சி சரிபார்ப்பை (LPG e-KYC verification) முடிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இதற்கான காலக்கெடுவை நீட்டித்து வழங்கி இருந்தன.
இந்த காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு அரசு வழங்கும் மானியம் தடைபடுவதோடு, செப்டம்பர் 1 முதல் முழு விலை கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
ATM Transaction Charges
ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம்: வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட இலவச வரம்பைத் தாண்டி பணம் எடுக்கும் போது விதிக்கப்படும் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் (ATM transaction charges) செப்டம்பர் 1 முதல் மாற்றங்கள் வரலாம்.
எனவே, வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களுக்குச் சென்று பணம் எடுக்கும் முன், தங்களது வங்கியில் அனுமதிக்கப்பட்டுள்ள மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்புகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.
Aadhaar Biometric Update
ஆதார் கார்டு பயோமெட்ரிக் அப்டேட்: நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் பணியில் இதுவரை சுமார் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் (Aadhaar biometric update) பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகள் 5 வயதை எட்டும் போது அவர்களின் கைரேகை மற்றும் கருவிழி விவரங்களை ஆதார் மையத்தில் பதிவு செய்வதும், பின்னர் 15 வயதில் மீண்டும் ஒருமுறை புதுப்பிப்பதும் கட்டாயமாகும்.
இதற்காக பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயோமெட்ரிக் விவரங்களை முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்த பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைன் வழியாக மாற்ற முடியாது என்பதால், பெற்றோர் குழந்தைகளை நேரடியாக ஆதார் சேவை மையத்திற்கு (Aadhaar enrollment centre) அழைத்துச் சென்று இந்த விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.



