Jio Airfiber: ரிலையன்ஸ் ஜியோவின் 46வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி, இந்த 46வது ஆண...
Jio Airfiber: ரிலையன்ஸ் ஜியோவின் 46வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி, இந்த 46வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், ஜியோ ஏர்ஃபைபர் சேவை செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
Jio Airfiber என்பது ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவையாகும், இது 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காற்றில் ஃபைபர் போன்ற வேகத்தை வழங்குகிறது. வெள்ளை ரூட்டர் போன்ற சாதனத்தை ஆண்டெனாவுடன் இணைத்து அதை ஆன் செய்வதன் மூலம் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் 1ஜிபிபிஎஸ் இணைய வேகம் வரை பெறலாம்.
Jio Airfiber விநாயகர் சதுர்த்தி அன்று அறிமுகம்
தெளிவாகச் சொல்வதானால், ஜியோ ஏர் ஃபைபர் என்பது அதிவேக இணையச் சேவையை வழங்கும் ஒரு முறையாகும். எந்தவொரு நிறுவனமும் இதுவரை வழங்காத வேகமான இணையத்துடன் நீங்கள் ஏர் ஃபைபரைப் பயன்படுத்தலாம். ஃபைபர் சேவையைப் பயன்படுத்த பொதுவாக கேபிள்கள் தேவைப்படுகின்றன.
ஆனால் ஜியோ நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை அதாவது ஜியோ ஏர் ஃபைபரைப் பயன்படுத்தி எந்த கேபிளின் உதவியும் இல்லாமல் காற்றில் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. ஜியோ ஏர் ஃபைபர் சேவையின் முக்கிய அம்சம் என்னவென்றால், அதன் கீழ் நீங்கள் 1 ஜிபிபிஎஸ் இணைய வேகத்தைப் பெறுவீர்கள். Jio AirFiber சேவையின் கீழ் பெற்றோர் கட்டுப்பாடு மற்றும் Wi-Fi 6 ஆதரவு உள்ளது.
ஜியோ ஏர் ஃபைபரை ஸ்மார்ட் டிவி, போன், கணினி போன்றவற்றுடன் எளிதாக இணைக்க முடியும்.மேலும் ஏற்கனவே வெளியான தகவலின்படி, ஜியோ ஏர்ஃபைபரின் விலை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபரை விட 20 சதவீதம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏர்டெல் ஏர்ஃபைபர் திட்டத்தின் ஆரம்ப விலை மாதத்திற்கு ரூ.799. இதேபோல், ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவையை 6 மாதங்களுக்கு விரும்பினால், ரூ. 4,435.
ஆனால் ஜியோ 20 சதவீதம் குறைந்த விலையை வழங்குகிறது. அதாவது ஜியோ ஏர் ஃபைபர் சேவை ரூ.640க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி ஜியோவால் தொடங்கப்படும் ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஏசிடி போன்ற பிற பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கும்.
இந்த ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதலில் சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜியோ ஒரு முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தை ரத்து செய்து புதிய திட்டத்துடன் மாற்றியுள்ளது.
அதாவது ஜியோ தனது ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தை சமீபத்தில் ரத்து செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஜியோ ரூ 119 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இப்போது ஜியோ ரூ.119 திட்டத்திற்கு பதிலாக ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ ரூ 149 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், 1 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றை வழங்குகிறது. இது தவிர, JioCinema, JioCloud மற்றும் JioTV ஆகியவற்றுக்கான சந்தாக்களும் கிடைக்கின்றன. இதேபோல், ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் 20 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
COMMENTS