இனாம்புலியூர் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம், புலியூர் மாரியம்மன் கோவில், வியாழன் மேடு, ஏட்டரை, நெய்தலூர் காலனி,
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இனாம்புலியூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சபரிவர மாரியம்மன் ஆலய
புணராவர்த்தன நூதன நுழைவு வாயில் கோபுர அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்
ஸ்ரீ விநாயகர் துதி
ஐந்து கரத்தானை ஆனை முகத்தனை சிந்தில் இளம்பிறை போலும் எயித்தனை நந்திமகனை ஞானக்கொழுந்தினப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
ஸ்ரீ அம்மன் துதி
பூத்தவளே புலன பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவேளே பின் கரந்தவளே கரைகண்டனுக்கு மூத்தவளே என்னும் மூவா முகந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
பக்தகோடிகளே!
பொன்னி எனும் காவேரி நதிபாயும் சோழவளநாட்டில் சிறப்புற்றதும் வான்பொய்யினும் தான் பொய்யா காவேரி நதிக்கு தென்பகுதியில் நீர்வளமும், நிலவளமும் செழிக்க பெற்ற இனாம்புலியூர் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு நிகரான அம்பிகையாக நான்கு வேதங்களாலும் போற்றபடும் நாயகியான ஸ்ரீ சபரிவர மாரியம்மன் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் வேண்டிய வரங்களை தந்து கருணையின் வடிவமாக அருளாசி தந்து ஆட்சி செய்கின்றாள். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பசாமி ஆகிய பரிவார தெய்வங்களுடன் கூடிய ஸ்ரீ சபரிவர மாரியம்மன் ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டு சிற்பகலா முறைப்படி வர்ணகலாபம் செய்யப்பட்டு
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் மாசி மாதம் 9-ம் தேதி (21.02.2024) புதன்கிழமை துவாதசி திதி, புனர்பூசம் நட்சத்திரமும், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.11 மணிக்குமேல்10.29 மணிக்குள் மேஷ லக்னத்தில் அகிலத்தையே ஆட்சி செய்கின்ற ஸ்ரீ சபரி மாரியம்மன் ஆலய புணராவர்த்தன & நூதன நுழைவு வாயில் கோபுர அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்தகோடி மெய்யன்பர்கள் அனைவரும் வருகைதந்து அம்பாளின் பரிபூர்ண அருளை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு
அருள்மிகு ஸ்ரீ சபரிவர மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக அழைப்பிதழ் நகலாக எடுத்து மேல் எழுதப்பட்டு இருக்கிறது வேறு ஏதும் உங்களுக்கு சந்தேகங்கள் அல்லது குறைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
COMMENTS